fbpx

மகள் செய்த காரியத்தால் PS 2 புரமோஷனில் கலந்து கொள்ளாத ஐஸ்வர்யா ராய்..!! நடந்தது என்ன..?

நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பில் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராய். தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராய் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தை உள்ளது. அவருக்கு தற்போது 11 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் குறித்து சிலர் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இதைப்பார்த்து ஷாக் ஆன ஆராத்யா, அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி இருக்கிறார்.

அவர் தனது தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மகளின் இந்த சட்ட போராட்டத்துக்காக அலைந்ததன் காரணமாக தான் நடிகை ஐஸ்வர்யா ராய் PS 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Chella

Next Post

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள்..!! கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு..!!

Thu Apr 20 , 2023
மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் ரூ.1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட […]

You May Like