fbpx

ஒரே படத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்-விஜய்..! இருவருமே சம்மதம்..! இயக்குனர் இவர்தான்..!

”நடிகர்கள் அஜித்-விஜய் ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன்… அதற்கு இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டிக்கான, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படங்களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், வெங்கட் பிரபு ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ”முன்னணி நடிகர்கள் அஜித் – விஜயை வைத்து திரைப்படம் இயக்க எனக்கு ஆசை உள்ளது. அஜித் – விஜய் இருவரும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்ப சூழல் வரும்போது படம் இயக்குவேன்” என்றார்.

ஒரே படத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்-விஜய்..! இருவருமே சம்மதம்..! இயக்குனர் இவர்தான்..!

மேலும், ‘மாநாடு படத்தில் நடிகர் சிம்புவை புதிய தோற்றத்தில் நடிக்க வைத்தேன். அதேபோல் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடிகர் சிம்பு, தன் வழக்கமான மேனரிசம் இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்றார். ‘திரைத்துறையில் இயக்குநராக சாதிக்க விரும்பும் இளைஞர்கள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்’ என்று இயக்குநர் வசந்த் சாய் அறிவுறுத்தினார்.

அஜித்தும், விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே படத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்-விஜய்..! இருவருமே சம்மதம்..! இயக்குனர் இவர்தான்..!

Chella

Next Post

6 பேரால் 4 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்.. கணவரின் கண் முன்னே நடந்த கொடூரம்..

Mon Sep 26 , 2022
ஜார்கண்டில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் சுமார் நான்கு மணி நேரம் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள சத்பர்வா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகோரியா-பால்வாஹி கிராமத்திற்கு அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. தனது மாமனார் – மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அப்பெண் சனிக்கிழமை தனது தாய்வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அப்பெண்ணின் மாமியார் […]
காதலியை நண்பர்களுக்கு இரையாக்கிய காதலன்..! 8 பேரும் மாறி மாறி..! நரக வேதனை அனுபவித்த இளம்பெண்..!

You May Like