fbpx

பவுன்சர்களுடன் நடிகை திவ்யா வீட்டிற்குள் நுழைந்த அர்னவ்..!! நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

சீரியல் பிரபலங்கள் அர்னவ்-திவ்யா என கூறினாலே என்ன பிரச்சனை என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் செய்தார்கள், திவ்யா கர்ப்பமானார், ஆனால் அர்னவ் தன்னை வயிற்றில் உதைத்துவிட்டார் என போலீஸில் புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரவர் அவர்களது வேலையை பார்த்து வர சமீபத்தில் திவ்யாவுக்கு குழந்தையும் பிறந்தது. அதன்பின் திவ்யா அர்னவ் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட அவரும் ஆடியோ வெளியிட்டு நடிகைக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், திவ்யா வீட்டிற்கு பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞருடன் சென்றுள்ளார் அர்னவ். ஆனால், கதவை திறக்காமல் திவ்யா இங்கே எதற்கு வந்தீர்கள், உங்களுக்கு இந்த வீட்டிற்குள் வர எந்த உரிமையும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், போலீஸை அழைத்துள்ளேன் அவர்களிடம் பேசுங்கள் என கூறியிருக்கிறார். இவர்களின் விவகாரம் மீண்டும் விஷரூபமெடுத்துள்ளது.

Chella

Next Post

'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்..!! அதிரடியாக இணைந்த நடிகை..!!

Wed Jun 14 , 2023
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்டு தோல்வியை தழுவி நிலையில், அடுத்ததாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே அனைத்து கட்சிகளும் யூகங்கள் வகுத்து தங்களுடைய கட்சிப் பணியை துவங்கியுள்ளனர். வேட்பாளர்கள் சேர்க்கை மற்றும் மாநாடு நடத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் சமீபத்தில் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடந்து முடிந்த நிலையில், […]

You May Like