fbpx

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஆயிஷா..!! விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம் இத்தனை லட்சங்களா..?

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆயிஷா வெளியேறியுள்ள நிலையில், அவரின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், நேற்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேறி உள்ளார். சின்னத்திரை நடிகையான இவர், விஜய் டிவியில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இயக்குனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். அதன் பின்பு ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானார். இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக விளையாடிய இவர், சில வாரங்கள் மந்தமாக செயல்பட்டார். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் தனது விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடி வந்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஆயிஷா..!! விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம் இத்தனை லட்சங்களா..?

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில் ராம் வெளியேறிய நிலையில், அடுத்ததாக குறைந்த வாக்குகள் பெற்று ஆயிஷாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே, ஆயிஷாவின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ஆயிஷாவுக்கு 20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் ஆயிஷா வென்றுள்ளார். இந்நிலையில், மொத்தமாக ஆயிஷா 12 லட்சத்திற்கு அதிகமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்பளமாக பெற்றுள்ளார். ஆயிஷாவுக்கு இவ்வளவு லட்சங்களா? என்று அவரது சம்பளத்தை அறிந்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும், இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பதால் அடுத்த கட்டமாக பிக்பாஸ் வீட்டில் பல கடுமையான டாஸ்க்குகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Chella

Next Post

பிஎஃப் கணக்கில் இதை செய்துவிட்டீர்களா..? வீட்டிலிருந்தே சுலபமாக அப்டேட் செய்வது எப்படி..?

Mon Dec 12 , 2022
பிஎஃப் கணக்கில் மொபைல் எண் மற்றும் இ-மெயிலை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியிருந்தால், அதனை எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வருங்கால வைப்பு நிதி கணக்கில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அவை எல்லாமே பயனாளர்களுக்காக மட்டுமே. எங்கும் அலைந்து நொந்துபோக வேண்டிய தேவை இருக்காமல் வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில், இபிஎப்ஓ-வில் பல்வேறு அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் மொபைல் […]

You May Like