fbpx

”பயில்வான் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்”..!! நடிகை ரேகா நாயர் ஆவேசம்..!!

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, திருவான்மியூரில் நடைப்பயிற்சி சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர், அவரை கடுமையாக திட்டினார். அங்கு இருவரும் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயில்வான் ரங்கநாதனை ரேகா நாயர் தாக்கவும் செய்தார்.

பயில்வான் ரங்கநாதன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், அவர் குறித்து ரேகா நாயர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ”பயில்வான் செத்தா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி. நான் என் வாழ்க்கையில் பட்டாசு வெடிச்சதே இல்லை. நரகாசூரன் செத்த நாளை தமிழர்கள் தீபாவளியா கொண்டாடுறாங்க. என்னுடைய நரகாசூரன் பயில்வான் ரங்கநாதன்” என்று பேசியிருந்தார்.

Chella

Next Post

அரிக்கொம்பன் யானையை எங்குதான் விடுவது? கோர்ட் சொல்லியது இதைத்தான்

Tue Jun 6 , 2023
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரிக்கொம்பன் யானையை, அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார். அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி […]

You May Like