fbpx

BB Tamil..!! உடல் முழுவதும் 175 தையல்..!! ஜிபி முத்துவை சரமாரியாக வெட்டிய சகோதரர்..!! உருக்கமான தகவல்..!!

டிக்டாக், யூடியூப் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜிபி முத்து தனக்கு, 175 தையல் போடப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட டிக்டாக் பிரபலமாக இருந்தவர் ஜிபி முத்து. சர்ச்சைக்குரிய பல வீடியோக்களை வெளியிட்டதால் இவரை கைது செய்ய வேண்டும் என்றும், இவருடைய வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் ஏராளம் உள்ளனர். ஆனால், இதையெல்லாம் கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய எதார்த்தமான அணுகுமுறையால், வெள்ளந்தி பேச்சாலும் ரசிகர்களை தன்வசமாக்கியுள்ளார் ஜிபி முத்து.

BB Tamil..!! உடல் முழுவதும் 175 தையல்..!! ஜிபி முத்துவை சரமாரியாக வெட்டிய சகோதரர்..!! பரபரப்பு சம்பவம்..!!

ஒருவேளை இவர் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால்… இவர்தான் வெற்றியாளர் என ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தன்னுடைய மகனின் உடல் நலம் சரியில்லாததாலும், அவர் மீதுள்ள அன்பாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறுவதாக அறிவித்தார். ஜிபி முத்துவின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தாலும், பின்னர் அவர் தன்னுடைய பிள்ளைகள் மேல் உள்ள பாசத்தால் காசு பணம் எதையும் பார்க்காமல் வெளியே செல்ல செல்வதாக அறிவித்தது இவர் மீது வைத்திருந்த மரியாதையை அதிகரிக்க செய்தது.

BB Tamil..!! உடல் முழுவதும் 175 தையல்..!! ஜிபி முத்துவை சரமாரியாக வெட்டிய சகோதரர்..!! பரபரப்பு சம்பவம்..!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு, சில ஊடகங்களிலும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் ஜிபி முத்து, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய சகோதரருக்கும் தனக்கும் வேலை செய்யும் இடத்தில் சண்ட ஏற்பட்ட போது அவர் கோபத்தில் கையில் கிடைத்த பிளேடை வைத்து சரமாரியாக உடலில் கிழித்து விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னை நண்பர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். அவர் பிளேடால் கிழித்ததில் தனக்கு 175 தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பிளேடால் தாக்கிய சகோதரர் தற்போது உயிரோடு இல்லை என்றும், அவர் தன்னை பிளேடால் கிழித்த வலியை விட… அவர் உயிரோடு இல்லை என்கிற வலி தான் அதிகமாக உள்ளதாகவும், தன்னுடைய சகோதரரின் பிள்ளைகளையும் தானே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Chella

Next Post

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பின்தொடர்ந்த 5 பேர்..!! காட்டுப்பகுதியில் வைத்து நடந்த சம்பவம்..!! வீடியோவில் கதறல்..!!

Fri Dec 2 , 2022
ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை, தாய் இறந்துவிட்டனர். இந்நிலையில், சிறுமி கடந்த செப்.23ஆம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் மாடுமேய்க்க சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். […]

You May Like