fbpx

BB Tamil..!! ’இதை செய்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கும்’..!! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இனிவரும் டாஸ்க்குகள் கடுமையானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ராம், ஆயிஷா வெளியேறினார்கள். இதுவரை 7 பேர் வெளியேறி உள்ள நிலையில் தற்போது, விக்ரமன், அசீம், ஷிவின், ரச்சித்தா, தனலட்சுமி, ஜனனி, ஏடிகே, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் இருக்கிறார்கள்.

BB Tamil..!! ’இதை செய்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கும்’..!! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிக்பாஸ் வீடு நேற்று திங்கட் கிழமை என்பதால் சற்று சுறுசுறுப்பாகவே இருந்தது. இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. இதில் ஜனனி, ஏடிகே, அசிம், விக்ரமன், மணி மற்றும் ரச்சிதா ஆகியோரை அனைவரும் பல காரணங்களை கூறி நாமினேட் செய்தனர். ரச்சித்தா இந்த வாரம் தலைவராகி உள்ளதால், இந்த வாரம் அவர் வெளியே வாய்ப்பு இல்லை. அதேபோல, அசீம் மற்றும் விக்ரமனும் வெளியேற வாய்ப்பு இல்லை என்பதால், இந்த வாரம், ஜனனி, மணி, ஏடிகே ஹிட் லிஸ்டில் இருக்கிறார். தற்போது இந்த வாரத்திற்கான சொர்க்கமா.. நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் 2 அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நரகத்தில் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள 2-வது ப்ரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஜனனி மற்றும் தனலட்சுமிக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி என அசீம் கேட்க இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பா இருக்கும் என்று இப்போதே நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கி விட்டனர். ஒரு சில இணையவாசிகள் அசீமுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அசீம் எந்த விளையாட்டையும் விளையாட விடுவதே இல்லை என்றும், கேட்டால் என்னைப் பிடிக்காதவங்க வீட்ல இருக்கலாம். ஆனா என்னைப் பிடிச்சவங்க வெளில கோடி பேரு இருக்காங்க என்று வியாக்காணம் பேசுகிறார். இவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கும் என பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம்..!! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..!!

Tue Dec 13 , 2022
டெல்லியில் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் […]
450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம்..!! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..!!

You May Like