இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு மிக்சர் போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக்பாஸ் வீட்டில் எப்படி சண்டை போட்டாலும், தனக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதை அசீம் நன்றாகவே அறிந்து கேமை விளையாடி வருகிறார். இந்த வாரம் எச்சில் சண்டை வரைக்கும் படு கேவலமாக சண்டை போட்டுள்ளார் அசீம். அதிக ஓட்டுக்களை பெற்று அசீம் இந்த வாரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அலட்டிக் கொள்ளாமல் அழகாக 2வது இடத்தை பிடித்திருக்கிறார் ஜனனி. இந்த வாரம் இளவரசியாக ஆட்டத்திலும் சற்றே கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அந்த அமுதவாணன் உடன் மட்டும் சேராமல் இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கருத்து.
இந்த வாரம் நாமினேஷனில் ஏகப்பட்ட மிக்சர் போட்டியாளர்கள் இடம்பெற்ற நிலையில், டபுள் எவிக்ஷன் வைங்க 4 எவிக்ஷன் வச்சு அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுங்க என்றெல்லாம் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். திடீரென கடைசி இடத்திற்கு தனா வந்த நிலையில், சற்றே ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால், கடைசியில் தனலட்சுமி தப்பித்துக் கொண்டார். கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினி தான் இந்த வாரம் ரொம்பவே மோசமான நிலையில் இருந்தனர். சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தையும் விளையாட்டில் காட்டாமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல நிவாஷினி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல்களை கசிய விட்டுள்ளனர்.