fbpx

டிஆர்பி-க்காக கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்..!! இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா..?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதில் இருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. மாறாக அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர்.

டிஆர்பி-க்காக கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்..!! இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா..?

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 10 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார். அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த சீசன், 70ஆவது நாளை நெருங்கிவிட்ட நிலையில் இதில் இறுதிப் போட்டியாளர்களாக யார் இருப்பார்கள் என்ற கணிப்பு தற்போதே தொடங்கிவிட்டது. ஆனால், அதற்கு முன்பாக பல்வேறு நபர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். தற்போது, அசீம், ஜனனி, மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன், ஏடிகே ஆகியோர் இந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் அசீம், விக்ரமன் ஆகியோர் இடையே கடுமையான சண்டை நிலவுதால் அவர்கள் கடைசிவரை ஆட்டத்தில் நீடித்திருப்பார்கள் என்றும், ஜனனிக்கு அதிக ரசிகர் கூட்டம் இருப்பதால் அவரும் இந்த வாரம் தப்பித்துவிடாவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த வாரம் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஜனனி எலிமினேட் ஆகி உள்ளார்.

டிஆர்பி-க்காக கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்..!! இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா..?

இந்த வாரம் ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த ஜனனி ஆர்மியினருக்கு கடைசி நேர ஷாக்கிங்காக ஜனனியின் எவிக்‌ஷன் மாறி உள்ளது. எப்படி அவர் இந்த வாரம் எவிக்ட் ஆனார் என்றும் ஏடிகே மற்றும் மணிகண்டனுக்கு திடீரென எப்படி அதிக ஓட்டுக்கள் கிடைத்தன என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஜனனி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்கிற தகவல் கசிந்த நிலையில், #Janany ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரது ரசிகர்கள் இந்த எவிக்‌ஷனில் ஏதோ சதி நடந்துள்ளது என தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பி-க்காக கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்..!! இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா..?

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி பேசு பொருளாக இல்லாமல் ரொம்பவே டல்லாக போனதை அறிந்த பிக்பாஸ் டீம் கடைசி நேர டிஆர்பி ட்விஸ்ட்டாக ஜனனியை எவிக்ட் செய்து விட்டு சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி உள்ளனர். ஜனனி எவிக்ட் ஆக தகுதியானவர் தான். அவர் அமுதவாணன் உடனே இணைந்து கேம் ஆடி வந்த நிலையில், தான் இந்த வாரம் அவர் எவிக்ட் ஆகி உள்ளார் என்றும் அடுத்த மிக்சரையும் தூக்கியதற்கு நன்றி. ஏடிகே மற்றும் மணிகண்டனை விட ஜனனி தான் வீக்கான போட்டியாளர், அடுத்தடுத்த வாரங்களில் அவர்களும் வெளியேறுவார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஜனனி வெளியேற முக்கிய காரணமே இந்த வாரம் அவருக்கு எதிராக ஜனனி விளையாடிய மோசடி விளையாட்டுத் தான் என்றும் அதனை ஏற்கனவே குறும்படமாக போட்டுக் காட்டி விக்ரமன் ஆர்மி செய்த சம்பவம் தான் கடைசி நேரத்தில் அவருக்கான ஓட்டுக்கள் குறைந்து வெளியேற்றப்பட்டார் என்றும் ட்வீட்கள் டிரெண்டாகி வருகின்றன.

Chella

Next Post

#திருப்பூர்: கோவிலின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தந்தை..!

Sun Dec 18 , 2022
திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் […]

You May Like