fbpx

சினேகன் மீது வழக்குப்பதிவு..!! விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!! ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி

பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னை பொதுவெளியில் அவதூறாக பேசியுள்ளார்.

சினேகன் மீது வழக்குப்பதிவு..!! விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!! ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி

அவரின் அறக்கட்டளை பெயரில் தான் பணம் வசூலிப்பதாக பொய்யாக சினேகன் பேசியுள்ளார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த விசாரணையில் எழும்பூர் நீதிமன்றம் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

லதா மங்கேஸ்வர் நினைவாக … 40 அடியில் வீணை சிலை

Wed Sep 28 , 2022
பாரதரத்னா விதுபெற்ற புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் 93வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவாக 40 அடி நீளத்தில் வீணை சிலையை உத்தரபிரதேச முதல்வர் திறந்து வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரயு நதிக் கரையில் இந்த வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 நீளமும் 12 மீட்டர் உயரமும் கொண்ட வீணை 14 டன் எடை உடையது. இவரது 92 ஆண்டு கால வாழ்வை சித்தரிக்கும் வகையில் 92 […]

You May Like