fbpx

கல்லூரி மாணவி கொலை வழக்கு ..! உச்சக்கட்ட கோபத்தில் விஜய் ஆன்டனி …!

ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஸ் என்பவர் கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசான அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் கல்லூரி மாணவியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் தமிழகமே கொதித்து போயிருந்தது.

இதைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியும் டுவிட் செய்துள்ளார். ’’ சத்யாவைக் கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமைாயாக விசாரித்து 10 வருடத்திற்க பின்னர் தூக்கில் போடாமல் , தயவு செய்து உடனே விசாரித்து , ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் ’’ என பதிவிட்டிருந்தார்.

இதனிடையே டாக்டரும்  , நடிகையுமான ஷர்மிளா அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன சார் வித்தியாசம் முதலில் விஷமத்தனமான  ஆண்மைத்தனமையை கொச்சைபடுத்துவதை விடுங்க்ள நாம் அன்றாடம் சமூகத்தில் பார்க்கும் நுட்பமான பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.. பெண்கள் மீதான அணுகுமுறையில்மாற்றம் தேவை ’’ என பதிவிட்டிருக்கின்றார்.

Next Post

பாகிஸ்தான் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ….!

Sat Oct 15 , 2022
பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை தூக்கி வருவதால் சாமானிய பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பலுசிஸ்தானின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் முகமது நூர் மெஸ்கன்ஷி இவர் ஹரன் என்ற பகுதியில் தொழுகை நடத்திக் […]

You May Like