சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் 90களில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை தான் சொல்வது எல்லாமே உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை என்ற மனப்பான்மையில் இருப்பவர். நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர், ஷர்மிலி உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால், அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து.
இந்நிலையில், பெரிய திரையை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன், சமீப காலமாக சின்னத்திரை குறித்தும் பேச ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில், தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி குறித்து பேசியிருக்கும் அவர், “திவ்யதர்ஷினியும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே இல்லை. உடல் தேவைக்காக மட்டுமே திருமணத்தை அவசர அவசரமாக முடித்தார்கள். அது ஒரு நோய். இரண்டு பேரும் தங்களது உடலை மட்டும் விரும்பினார்கள். அதற்கான தேவை முடிந்த பிறகு விவாகரத்து செய்துகொண்டனர்” என்றார். இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.