fbpx

’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

நடிகை பாவனா அணிந்திருந்த உடை, சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது.

’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

தன் மீது எழுந்த இந்த சைபர் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பாவனா தனது சமூகவலைத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கானவர்கள் யாரும் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பவும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது, இப்படியான சிலர் அவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிக்கின்றனர்.

’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் இருளுக்குள் தள்ளுவதை உணர்கையில் மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகின்றனர் என்றால், நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்றிருக்கிறார்.

’ஆடைக்கு உள்ளே எதுவும் போடவில்லையா’? நடிகை பாவனா சொன்ன விளக்கம்..!!

இவர்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த உடையில், பாவனா ஆடைக்கு உள்ளே அவர் எந்த உடையும் அணியவில்லை என்று பலரும் அவரை கமெண்ட் செய்து அவரை மோசமாக விமர்சித்துள்ளனர். அதற்கு விளக்கமளித்துள்ள பாவனா, ’நான் என் சருமத்தின் நிறத்தில் ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடை அணியவில்லை. அப்படி அணியும் நபரும் நானில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இதுகுறித்து தெரிந்திருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Chella

Next Post

டைனோசர்களின் அழிவுக்கு ராட்சத விண்கல் தான் காரணமா..? புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

Tue Sep 27 , 2022
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்கியதால் தான் டைனோசர்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் அது முழு உண்மையா? நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (பிஎன்ஏஎஸ்) இதழில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய ஆய்வு நீண்டகாலமாக நம்பப்படும் விண்கல் கோட்பாட்டிற்கு முரணானது! ஆம்.. பூமியை அந்த விண்கல் தாக்கிய அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு முன்பே டைனோசர்கள் அழியத் தொடங்கிவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. டைனோசர்களின் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் […]

You May Like