சமீபத்தில் நடிகர் சூர்யா ’வணங்கான்’ படத்தில் இருந்து விலகியது, தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இதுதொடர்பாக பயில்வான் ரங்கநாதன், அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலா தற்போது, தனது மனைவியை பிரிந்த சோகத்தில் இருக்கிறார். அதன் காரணமாக சூர்யாவும், அவரது அப்பாவும் பாலாவை அழைத்து ஒரு படத்தை தயாரித்து நடிக்க முடிவெடுத்துள்ளனர். அதனடிப்படையில், ’வணங்கான்’ படப்பிடிப்பு பிரம்மாண்டமாக செட் அமைத்து தொடங்கப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி ஒப்பந்தமானார்.
அந்த சமயத்தில், படபிடிப்பின் போது, விடுதியில் அறை புக் செய்துள்ளனர். ஹீரோ, ஹீரோயினி, இயக்குனர் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் தான் ரூம் புக் செய்வார்கள். ஆனால், பாலா என நினைத்தார் என்று தெரியவில்லை சூர்யாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அறையை புக் செய்துவிட்டு, தன்னுடைய அறைக்கு பக்கத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு அறை புக் செய்துள்ளார். இது ஒரு பிரச்சனை. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கியபோது தயாரிப்பாளர் வேண்டும் என்ற அடிப்படை மரியாதை கூட இல்லாமல், சூர்யாவுக்கு பாலா மரியாதை கொடுக்கவில்லை.
நந்தா படத்தின் போது இருந்த சூர்யா போன்ற இப்போது இல்லை என்றும் பாலா கூறியுள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பை கோவையில் வைக்கலாம் என்று பாலா முடிவு செய்துள்ளார். ஆனால், சூர்யா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. சென்னையில் படப்பிடிப்பை மாற்றி உள்ளார். முதலில் தயாரிப்பாளரிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு, அதன் பிறகு கதையை மாற்றுவது எப்படி? இது தவறுதானே… வணங்கான் படம் வேண்டும் தொடரும் என்கின்றார் பாலா. அது எப்படி சாத்தியமாகும். இந்த தலைப்பு சூர்யா நிறுவனத்திற்கு சொந்தமானது. இது வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இதே போன்று தான் விக்ரமிடமும் தகராறு செய்திருக்கிறார் பாலா. இப்படியே போனால் பாலாவிடம் யார் தான் நடிப்பார்.. தயாரிப்பாளர்கள் யாரும் வர மாட்டார்கள். இவர் திட்டமிட்டு படம் எடுக்கமாட்டார். சொன்ன கதையை எடுக்க மாட்டார். இதுதான் பாலாவிடம் உள்ள பெரிய பிரச்சனையே” என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.