fbpx

’ஏலே பஸ்சரை அடிங்களே’..!! கதை சொல்ல விரும்பாத ஜிபி முத்து..!! என்ன காரணம் தெரியுமா..?

’கதை சொல்லும் நேரம்’ டாஸ்கில் ஜிபி முத்துவே அவர் கதையை சொல்ல முடியாமல், பஸ்சரை அடிக்க சொன்ன வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் ஆக “கதை சொல்லும் நேரம்” கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம். லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும். அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 நொடிகளுக்குள் 3 பஸ்சர்களை அழுத்தினால் கதை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அப்படி ஒன்று அல்லது 2 பஸ்சர்கள் மட்டும் அடிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்கள் கதை சொல்லலாம் என்று முதல் ப்ரோமோ பார்க்கும் போது புரிந்தது.

’ஏலே பஸ்சரை அடிங்களே’..!! கதை சொல்ல விரும்பாத ஜிபி முத்து..!! என்ன காரணம் தெரியுமா..?

இதில், அனைவரும் தங்களின் கடந்த வாழ்க்கை கதையை உருக்கத்துடன் பேச துவங்கினர். ஷிவின் கணேசன், தன் கதையினால் மற்ற போட்டியாளர்களையும், பிக்பாஸ் ரசிகர்களையும் கண் கலங்க செய்தார். அந்த வரிசையில், விக்ரமன் “ நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது” என்று பேச துவங்கிய போது, மூன்று பஸ்சரை அழுத்தி, விக்ரமனை கதை சொல்ல விடாமல் தவிர்த்தனர். அதற்கு ஜி.பி முத்து “கை தட்டவும் செய்யராங்க, பஸ்சர் அடிக்கவும் செய்யராங்க, யாருயா நீங்கலாம்” என்று கூறினார்.

https://twitter.com/BBFollower7/status/1582990107468238849?s=20&t=qmg4ziKveKBIgyjLFfHhlw

அனைத்து டாஸ்க்குகளிலும் கலக்கும் ஜி.பி முத்து, “நண்பர்களே நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்தேன். மூன்றாவது வரைக்கும்தான் படிச்சுருக்கேன். சின்ன வயதில் இருந்து வேலை பாத்தேன். அப்புறம் கடை வெச்சேன். டிக்டாக் வந்துச்சு, டிக்டாக் மேல் கிறுக்காகிவிட்டேன்.” என்று சொல்லிக்கொண்டு இருந்த போது “ஏலே அடிங்களே” என்று அவரே மற்றவர்களிடம் பஸ்சரை அடிக்க சொன்னார். பின், கதையை விவரிக்க துவங்கிய ஜி.பி முத்துவிடம், பிக்பாஸ், “உங்கள் கதை நிராகரிக்கப்பட்டது.” என்று சொன்னார். அவரே அவர் கதையை சொல்ல முடியாமல், பஸ்சரை அடிக்க சொன்ன வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! ’ஓய்வூதியதாரர்களுக்கு நிரந்தர தீர்வு’..!! மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!!

Fri Oct 21 , 2022
ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டு வருகின்றது. மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும், விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையிலும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு […]
குட் நியூஸ்..!! ’ஓய்வூதியதாரர்களுக்கு நிரந்தர தீர்வு’..!! மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!!

You May Like