மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயராம். அந்தவகையில், அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதில் இவரின் அசால்ட்டான நடிப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்திருந்தது. ஜெயராம் நடிப்பில் மட்டுமின்றி சமூகநலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்றைய தினம் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெயராம் பேரணியிலும் கலந்து கொண்டார். மேலும், அங்கு கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார். இவரின் இந்த மனிதாபிமானத்தை பாராட்டி பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.