fbpx

ஒரே படத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த சிவாஜி கணேசன்..!! என்ன படம்? வேண்டுமென்றே செய்தாரா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹீரோவாக அதிக படங்களில் நடித்தது சிவாஜி தான். எல்லா கதாபாத்திரத்திற்கும் சிவாஜி கணேசன் பொருந்த கூடியவர். இந்நிலையில், சிவாஜி பல படங்களில் சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி நல்லதுக்காகத்தான் இவ்வாறு செய்தார் என்பது போல காண்பித்து விடுவார்கள். ஆனால், ஒரே ஒரு படத்தில் தான் முழு வில்லனாக சிவாஜி நடித்துள்ளார்.

ஒரே படத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த சிவாஜி கணேசன்..!! என்ன படம்? வேண்டுமென்றே செய்தாரா?

அதாவது பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’உத்தம புத்திரன்’. இந்த படத்தில் விக்கிரமன் மற்றும் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதில் விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தில் தான் சிவாஜி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் பத்மினி, நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர். சிவாஜியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. மேலும் வில்லன் சிவாஜி இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்து விடுவார். இந்தப் படத்தில் தான் சிவாஜி முழு வில்லத்தனதுடன் நடித்திருப்பார். அதன் பின்பு இவர் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததில்லையாம்.

ஒரே படத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த சிவாஜி கணேசன்..!! என்ன படம்? வேண்டுமென்றே செய்தாரா?

இதுவரை சிவாஜி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களின் நடித்துள்ளார். இதில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த சிவாஜி இந்த ஒரு படத்தினால் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தாலும் அதன் பின்பு சுதாகரித்துக் கொண்டு நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

Chella

Next Post

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

Sun Nov 27 , 2022
ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கேரள மோட்டார் வாகனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சபரிமலை தரிசனத்துக்கு […]
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

You May Like