fbpx

கண் கலங்கிய ஜிபி முத்து, கட்டி தழுவிய உலக நாயகன்!!! பிக்பாஸ் சீசன்-6

தொடங்கியது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்-6. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் யார் இந்த நிகழ்ச்சிக்கு வரப்போவது என்பதின் பட்டியல் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. அதில் வந்த பெயர்களில் ஒன்று தான் ஜிபி முத்து. உண்மையில் அவர் பிக்பாஸ் வீட்டினுள் முதல் ஆளாக நுழைந்தார்.

இந்நிலையில் ஜிபி முத்துவை அழைத்த கமல்ஹாசன் அவருக்கு அவருடைய குறும்படம் ஒன்றை காண்பித்தார். இது வழக்கமான ஒன்று தான், பிறகு பேசிய கமல்ஹாசன் ஜிபி முத்துவிடம் நீங்க வழக்கமாக பேசும் வாட்டர வழக்குல திட்டுறத பிக்பாஸ் வீட்டினுள் பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் ஜிபி முத்துவின் குடும்பத்தாரை மேடைக்கு அழைத்தார். அப்போது கண் கலங்கிய ஜிபி முத்துவை கட்டி தழுவி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். மேலும் ஜிபி முத்துவின் சிம்ப்ளிசிட்டியையும் பாராட்டினார் கமல்ஹாசன். ஜிபி முத்துவை தொடர்ந்து ராப் சிங்கர் வசந்தும் வீட்டினுள் வந்தார்.

Kathir

Next Post

குதூப்மினாரில் விநாயகர் சிலைகள் :  பாதுகாக்க போடப்பட்ட இரும்பு வலைகள் அகற்றம் …

Sun Oct 9 , 2022
குதூப்மினாரில் விநாயகர் சிலைகள் பல ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக போடப்பட்ட இரும்பு வலைகள் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று குதூப்மினார். இதில் விநாயகர் சிலைகள் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குத்புதீன் ஐபக் மசூதி உருவாக்குவதற்காக 27 இந்து மற்றும் ஜெயின் கோவில்களை அழித்ததாக கூறப்படுகின்றது. இதனால் குதுப்மினார் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலைகள் மீட்டெடுக்க தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் ஏ.எஸ்.ஐ. (இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ) […]

You May Like