fbpx

’சோறு போட்டதை கூட மறந்துட்டான்’..!! ’நன்றி கெட்டவன்’..!! நடிகர் சூரியை வெளுத்து வாங்கிய போண்டா மணி..!!

இலங்கையில் இருந்து அகதியாக தமிழகத்திற்கு வந்து, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்த போண்டா மணிக்கு இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், தான் இயக்கி நடித்த ‘பவுனு பவுனுதான்’ என்கிற படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது. இதை தொடர்ந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு, தன்னுடைய 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

தற்போது உடல்நலம் தேறி, மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ள போண்டா மணி, அடுத்தடுத்து பல யூடியூப் சேல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் நான் உதவியுள்ளேன். அவர் பலருக்கு உதவி செய்கிறார் என கேள்வி பட்டுள்ளேன். ஏனோ எனக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட உதவி செய்ய முன்வரவில்லை என கூறி இருந்தார். மேலும், தனக்கு உதவி செய்தவர்கள் யார் யார் என கூறி லிஸ்டு போட்டு நன்றி தெரிவித்தார். இந்த பேட்டியில் நடிகர் சூரி குறித்து மிகவும் மோசமாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது சூரி, தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் இருந்து வந்து, பட வாய்ப்புகள் தேடி அலைந்த போது, தன் வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு கவனித்து கொண்டுள்ளார் போண்டா மணி.

நகைச்சுவை தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்ததோடு, தினக்கூலியாக சூரிக்கு ரூ.200 சம்பளமாக கொடுத்தாராம். அப்படி இருக்கையில் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்கிற செய்தி வெளியானபோது, உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஒரு போன் போட்டாவது விசாரித்திருக்கலாம். அன்னைக்கு சோறு போட்டதை கூட மறந்துட்டான், சூரி ஒரு நன்றி கெட்டவன் என வெளுத்து வாங்கியுள்ளார்

Chella

Next Post

’விடுதலை’ படத்திற்கு வாழ்த்து சொல்லி மாட்டிக் கொண்ட ’லவ் டுடே’ இயக்குனர்..!! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!!

Wed Apr 5 , 2023
தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி வாகைசூடியுள்ளன. இந்நிலையில், இவர் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனையும், விடுதலை படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அந்த […]

You May Like