fbpx

”இனி சினிமாவில் நடிக்க மாட்டாரா”..? கணவருடன் இணைந்து புதிய பிசினஸில் குதித்த நயன்..!!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கியுள்ளார்.

நடிகர், நடிகைகள் பலரும் பிசினஸ் தொடங்கி அதில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்றுதான். நடிகை சமந்தா ‘சகி’ என்ற ஆடை பிசினஸ், நடிகை காஜல் நகை, தொழிலில் முதலீடு என பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அழகு சாதன பொருள் விற்பனை தொழிலை தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

முதலில் தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து, சாய் வாலே என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்ததாக, கெமிக்கல் ப்ரீ லிப் பாமை தயாரித்து அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார். தி லிப் பாம் கம்பெனி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், ’9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கியிருக்கிறார். இப்படி வரிசையாக பிசினஸ் தொடங்கி வந்தால் அப்போ சினிமா அவ்வளவுதான என சில ரசிகர்கள் கேட்க, சினிமாவிலும் வழக்கம் போல நயன் கலக்குவார் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டாரங்கள். நயன்தாராவின் புதிய அவதாரத்திற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’இது அபத்தம்’..!! ’இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’..!! மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி..!!

Thu Sep 14 , 2023
இந்தியாவை இந்தி ஒன்றிணைப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது அபத்தம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்து […]

You May Like