fbpx

’அது எப்படி திமிங்கலம்’ மொமண்ட்..!! ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் ரிலீசாகும் படம்..!!

ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய ‘பிதா’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

வரும் 7ஆம் தேதி காலை படப்பிடிப்பு தொடங்குகிறது. அன்றே எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங் போன்ற அனைத்துப் பணிகளையும் முடித்து, மறுநாள் 8ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.சுகன் எழுதி இயக்கும் இதில் அனு, ஆதேஷ் பாலா, அருள்மணி, சாம்ஸ் நடிக்கின்றனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைக்கிறார். பாபா கென்னடி வசனம் எழுத, வினோத் ஜாக்சன் ‘லைவ் சவுண்ட்’ மூலம் ஒலிப்பதிவு செய்கிறார். விச்சூர் எஸ்.சங்கர் தயாரிக்கிறார்.

டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாளராக இருந்த சுகன், பிறகு இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் பணியாற்றினார். தற்போது ‘பிதா’ திரைப்படம் மூலம் இயக்குனராகிறார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ’இதுவரை 8 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதல்முறையாக சினிமா படம் இயக்குவதால், ஏதாவது புதுமை செய்ய விரும்பினேன். முதல் நாள் காலையில் தொடங்கும் படப்பிடிப்பை நள்ளிரவு முடிகிறது. 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் காட்சிகள் இடம்பெறுகிறது. 5 லொக்கேஷன்களில், 9 கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. ‘பிதா’ என்ற தலைப்புக்கு கீழே 23:23 என்ற எண்கள் இடம்பெறுகிறது. இதற்கான விடை ரிலீஸ் அன்று கிடைக்கும்’ என்றார்.

Chella

Next Post

’என் பொண்டாட்டி கூட நீ அப்படி பண்ணலாமா’..? வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்..!! பகீர் சம்பவம்

Wed Apr 5 , 2023
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. பின்னர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

You May Like