fbpx

’பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளேன்’..!! ’என்னை காப்பாற்றியது வடிவேலு தான்’..!! பகீர் கிளப்பிய மாரி செல்வராஜ்..!!

தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, தான் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். அப்படி ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதம் எழுதும் நேரத்தில் அங்கு வடிவேலுவின் நகைச்சுவையை கண்டு ரசித்து சிரித்துள்ளார்.

அதன்பின் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தன்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியது வடிவேலுவின் நகைச்சுவை தான் என மாமன்னன் வெற்றி விழா மேடையில் உருக்கமாக பேசினார் மாரி செல்வராஜ்.

Chella

Next Post

காவேரி கூக்குரல் சார்பில் 3 மாவட்டங்களில் 9,000 மரங்கள் : ஈஷா மையம்

Sun Jul 9 , 2023
தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் சுமார் 9,000 மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர் என்று ஈஷா மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’என்ற பெயரில் […]

You May Like