fbpx

’பிக்பாஸுக்கு பிறகு சரியாகிடும்னு நினைத்தேன்’..!! ரச்சிதாவின் கணவர் பரபரப்பு பேட்டி..!!

சீரியல் பிரபலங்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரச்சிதா, தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில் “நான் அவரை விரட்டுவதாக என் மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், உண்மை என்ன என்பதை அவருடன் நான் வாட்ஸ் அப்பில் உரையாடிய சாட்டை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி தானும் ரச்சிதாவும் உரையாடிய சாட் ஒன்றை காட்டியுள்ளார்.

“இதையெல்லாம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரே பார்த்துட்டாங்க. குடும்பத்தில் 10, 15 முறை பேசிட்டாங்க. பிக்பாஸுக்கு பின் வெளியில் வந்த பின்னராவது சரியாகிடும்னு நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்றும் அந்தப் பேட்டியில் தினேஷ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது அந்தத் தொகுப்பாளரிடம் இந்த வாட்ஸ் அப் சாட்டில் நான் ஏதாவது ஆபாசமாக பேசியுள்ளேனா..? எனவும் கேட்கின்றார். அதற்கு அந்தத் தொகுப்பாளர் இல்லை எனக் கூறியுள்ளார்.

Chella

Next Post

டைட்டன் நீர்மூழ்கியில் முன்னரே பிரச்சனை இருந்ததா?

Fri Jun 23 , 2023
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஓசன் கேட் என்ற நிறுவனத்தின் டைட்டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18ஆம் தேதி 5 சுற்றுலாப் பயணிகளுடன் நீருக்குள் மூழ்கியது. இந்தக் கப்பலுக்கு உதவி செய்யும் வகையில் கடல் மட்டத்தில் மற்றொரு கப்பல் காத்திருந்தது. நீருக்குள் உள்ள இந்த ஓசன் கேட் கப்பல் கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருக்கும்.இந்நிலையில் சம்பவத்தன்று ஓசன் கேட் கப்பல் கடலுக்குள் மூழ்கி ஒன்றரை மணி […]

You May Like