தமிழ் சினிமாவில் ’சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் பிற மொழி படங்களில் நடித்தார். பிப்ரவரி 17ஆம் தேதி 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது, திடீரென காரில் கடத்திச் செல்லப்பட்டு, அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டு வருகிறது. பின்னர், பாவனாவை கடத்தியவர்களில் ஒருவர் சிக்கிய நிலையில், மலையாள திரையுலகைச் சேர்ந்த தீலிப் தான் கடத்த சொன்னதாகக் கூறினார். இவர் தான் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர். அவர்களுக்கு விவகாரத்து நடந்த பிறகு தீலிப், காவியா மாதவனைத் திருமணம் செய்து கொண்டார்.
காவியா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் இவர்களின் காதல் நடந்த நிலையில், அதைப் பாவனா சென்று தோழியிடம் சொல்லி உள்ளார். அதனால் தான் தீலிப் அவரை ப்ளான் செய்து கடத்தி இருக்கிறார். இதனால் நடிகை பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு முறை விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் என்ன என கேட்டார். அப்போது பேசிய அவர், “பாவனாவுடனான எனது நெருங்கிய உறவு தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவருடன் அந்தரங்க உறவில் இருந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்று பேசினார். இந்த பதில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
முன்னதாக காரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய பாவனா, ”என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இருந்தும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்” என்றார்.