fbpx

ரன்பீர்-ஆலியா குழந்தை குறைபிரசவமா?

ரன்பீர்-ஆலியாபட் தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் 2 மாதத்தில் தங்களுக்கு விரைவில் வாரிசு வரப்போவதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணமாகி 7 மாத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் வழக்கம் போல நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பியுள்ளனர்.

ஒருபுறம் அவர்களுக்கு குறை பிரசவம் நடந்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகின்றது. அப்படி குறை பிரசவம் இல்லை என்றால் திருமணத்தின்போதே ஆலியா கருவுற்றிருந்தாரா என்ற கேள்வியும் வதந்தியும் சமூக வலைத்தலங்களில் சுற்றி வருகின்றது.

கடந்த ஒரு மாத்திற்கு முன்புதான் வளைகாப்பு புகைப்படம் என்று ஆலியா-ரன்பீர் தம்பதியினர் தெரிவித்தனர். நேற்று மாலை தங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாக ரன்பீர் கபூர்- ஆலியாபட் தம்பதியினர் தகவல் வெளியிட்டனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆலியா பட், ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற இந்தி திரைப்படத்திலும் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிக்க உள்ளார்.

Next Post

15 பேர் கைது... உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...! முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Tue Nov 8 , 2022
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு […]

You May Like