fbpx

பட வாய்ப்பு கிடைக்காததால் இப்படி ஒரு முடிவா..? நேரிலேயே பார்த்த பயில்வான்..!! விஜய் பட நடிகை கீதாவுக்கு என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவில், குணசித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை கீதா. இவர் நடித்த குருதிப்புனல், சிவகாசி, சந்தோஷ் சுப்ரமணியன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தன. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா, முற்றிலும் மாறி ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார் என்று நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், ”நடிகை கீதா பாலசந்தர் மூலம் அறிமுகமானவர். அவர் ஒரு அருமையான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரின் தோற்றம் ஒரு முதிர்கனியாக இருக்கும். ஒரு படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிறகு அம்மா, தங்கை கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், முற்றிலும் ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார். தமிழ்நாட்டில் எங்கு புராண கோவில் இருக்கிறதோ, அங்கு சென்று மூன்று நாட்களாகவாது தங்கி ஆன்மிகவாதியாக மாறிவிடுவார்.

நான் அவரை சமீபத்தில் காஞ்சிபுரத்தில்தான் பார்த்தேன். அவரை பார்க்கும்போது பெண் சாமியார் போல இருந்தது. அப்படி ஒரு பெண் சாமியாராகவே கீதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என பயில்வான் கூறியுள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா, தற்போது எந்த படங்களில் பார்க்க முடிவதில்லை. இவர், கடைசியாக தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மத்தாப்பூ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

திடீரென எகிறிய தங்கம் விலை..!! இப்படியே போச்சுனா என்னதான் பண்றது..? இன்றைய நிலவரத்தை நீங்களே பாருங்க..!!

Thu Aug 31 , 2023
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே […]

You May Like