ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் வாங்கிய அடியை ஜெயிலர் மூலம் திருப்பி கொடுக்க வேண்டுமென நெல்சனும், 2 படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்தும் பணியாற்றியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படம் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், சிலரோ நெகட்டிவ் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். அதாவது, ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது. கதையில் ஆங்காங்கே சொதப்பல் உள்ளது. முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி மோசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் குரோம்பேட்டை வெற்றித் திரையரங்கில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், இப்படம் குறித்து மோசமாக விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி விஜய் ரசிகரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கியுள்ளனர்.