fbpx

”மேனேஜர், தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்”..!! நடிகை கல்யாணி ஓபன் டாக்..!!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை கல்யாணி, ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த இவர், தனது 15-வது வயதில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சரியாக போகாததால், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களில் நடித்தார். சினிமா, சீரியல் தொகுப்பாளினி என பிஸியாக இருந்த கல்யாணி, 2014இல் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. தற்போது சென்னையில் கணவருடன் செட்டிலாகி இருக்கும் கல்யாணி, சினிமாவை விட்டு தான் விலகி சென்றதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நான் 7 வயது முதல் 26 வயது வரை குழந்தை நட்சத்திரம் தொகுப்பாளினி என படு பிஸியாக இருந்தேன். எனக்கு 15 வயது இருக்கும் போது 2 படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அப்போது என் பெயரை பூர்ணிமா என்று மாற்றிக்கொண்டேன். ஆனால், அந்த 2 படங்களும் சரியாக ஓடாததால், சில ஆண்டுகள் வீட்டில் இருந்தேன். அப்போது தான் ஒருபெரிய சேனலில் இருந்து எனக்கு தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு ஆங்கர் என்னை பாருக்கு வரீங்களா என கேட்டார். ஆனால், அப்போது முடியாது என்று சொல்லிவிட்டதால், அந்த சேனலில் இருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வரவே இல்லை.

அதேபோல, நான் ஹீரோயினாக நடித்த போது, அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றீங்களா என்று என் அம்மாவிடம் கேட்டார்கள். அது அம்மாவுக்கு புரியாததால், டேட் தானே சார் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன் பிறகு தான், அது இல்ல மேடம், மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு தான் எங்க குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம்” என்றார். அதன்பின் தான் விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகும் வாய்ப்பு கிடைத்தது என்று நடிகை கல்யாணி பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசினார்.

Chella

Next Post

குளிர்விக்க வருகிறது மழை..!! அதுவும் இந்த தேதியில்..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Sun Mar 12 , 2023
மார்ச் 15ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் […]

You May Like