fbpx

CWC-க்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த மணிமேகலை..!! ஆனா, இப்போ வேற மாதிரி..!! வெளியானது வீடியோ..!!

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் 10 குக்குகளுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. டாப் 5 இடத்தை பிடிக்க போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்தார் சிவாங்கி.

கடந்த சீசன் வரை சமையல்னா என்னவென்றே தெரியாமல் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, கடந்த 6 மாதங்களில் கடுமையான பயிற்சி எடுத்து இந்த சீசனில் குக் ஆக களமிறங்கினார். ஆரம்பம் முதலே சமையலில் அசத்தி வந்த சிவாங்கி, தற்போது பைனல் வரை முன்னேறி உள்ளது நடுவர்களுக்கே வியப்பாக இருந்தது. இப்படி பல்வேறு ஆச்சர்யங்கள் அடங்கிய இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் சில அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களும் நடந்துள்ளன.

அப்படி ஒரு விஷயம் தான் மணிமேகலை பாதியிலேயே வெளியேறியது. கடந்த 3 சீசன்களாக கலக்கி வந்த மணிமேகலை, இந்த சீசனிலும் முதல் சில வாரங்கள் கோமாளியாக கலந்துகொண்டார். ஆனால், திடீரென இந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அவர் எதற்காக விலகினார் என்பது புரியாத புதிராகவே இருந்தது. விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காததால், அவர் கர்ப்பமாக இருப்பதனால் விலகினார் என்றும், அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விலகினார் என்றும் பலவிதமான செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு திடீரென ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மணிமேகலை. அவர் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதன்மூலம் மணிமேகலை இந்த வாரம் கோமாளியாக அல்லாமல் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார் என்பது தெரிகிறது. போர் தொழில் படக்குழு சார்பில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இந்த வார எபிசோடில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். இந்த எபிசோடு ஒளிபரப்பாகும்போதாவது தான் திடீரென விலகியதற்கான காரணத்தை மணிமேகலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Chella

Next Post

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை அவர் துன்புறுத்தியதாக - ஆட்சியர் குற்றச்சாற்று..!!

Thu Jun 8 , 2023
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக, தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார். ககன்தீப் சிங் பேடி சென்னை மாநாகர ஆட்சியராக இருந்ததன் மூலம், பொதுமக்களிடையே நன்கு பரிட்சையமானவர். வெள்ளம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் அதிவேக செயல்பாடு, பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தபோதும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசும் தமிழ் ஆகியவற்றின் மூலம் சமூக வலைதலங்களிலும் பாராட்டுக்களை […]

You May Like