fbpx

”பணத்தாசையில் திருமணம்”..!! ”அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டா இப்படி தான் நடக்கும்”..!! மகாவை சீண்டும் பயில்வான்..!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தரும் ஒருவர். இவர், லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதற்கிடையே, கடந்தாண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த ஜோடி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமடைந்தனர். மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடினர்.

இந்நிலையில், ரவீந்தர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், “வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா” என்று மகாலட்சுமியைக் குத்திக் காட்டிப் பேசி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார். அதாவது ரவீந்தர் கைது செய்யபட்டதற்கு மகாலட்சுமியை கட்டிக்கொண்டது தான் முக்கிய காரணம் எனவும், அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டா என்ன நிகழும் என்பதற்கு மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் ரவீந்தரை பணத்தாசையில் தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்’ என பயில்வான் பேசியிருக்கிறார்.

Chella

Next Post

”என் கூட பேச மாட்டியா”..? வீடு புகுந்து நர்சிங் மாணவியை வெட்டி சாய்த்த காதலன்..!! பகீர் சம்பவம்..!!

Fri Sep 15 , 2023
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பினு ஜேக்கப். இவரது மகள் அல்கா அன்னா பினு (20). இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில், பசில் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென பசிலிடம் பேசுவதை அல்கா அன்னா பினு தவிர்த்து வந்துள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பசில் கடந்த 5ஆம் தேதி அல்கா […]

You May Like