fbpx

Meera Jasmine..!! சினிமாவில் இருந்து விலகியது ஏன்..? முதன்முறையாக மனம் திறந்த மீரா ஜாஸ்மின்..!!

நடிகை மீரா ஜாஸ்மின் என்றதுமே நம்மில் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது, ரன் படத்தில் அமைதியாக ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த அவரது அழகும், சண்ட கோழி படத்தில் துரு துரு குடும்ப குத்துவிளக்காக நடித்த அவரது கதாபாத்திரமும் தான். இதையடுத்து மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். ஆனால், 2014-க்குப் பிறகு மீரா ஜாஸ்மின் எந்தவொரு படங்களிலும் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

பின்னர், தற்போது மீரா ஜாஸ்மின் இயக்குநர் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மீரா ஜாஸ்மீன் சினிமாவில் சிறிது காலம் விலகி இருந்தமைக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் “நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் ஆகியோருடன் நடித்துள்ளேன். தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். எனது பயணம் சிறப்பான ஒன்றாகவே இதுவரை இருந்திருக்கிறது” என்றார்.

மேலும் “சில ஆண்டுகாலம் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். அதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது. சமூக வலைதளங்களில் என்னுடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் பாஸிட்டிவாக பதிலளிப்பதால் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

Chella

Next Post

கட்டிட வேலைக்கு செல்வர்களுக்கு சிரமம்..!! இனி காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறப்பு..? அமைச்சர் சொன்ன தகவல்..!!

Tue Jul 11 , 2023
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்தது. இதேபோல கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பாக்கெட் மதுவிற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”500 டாஸ்மாக் கடைகள் […]

You May Like