’அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’ என்று நடிகை பாவனி தெரிவித்துள்ளார்
பிரபல சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி, தனது முதல் கணவரின் மரணத்திற்கு பின் மீடியா வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். அவரை தேற்றி மீண்டும் சின்னத்திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதன்பின் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பாவனி, தற்போது இரட்டிப்பு மடங்காக ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களது பாசமும், ஆதரவும் பாவனியை மீண்டும் தனது இன்னிங்ஸை விட்ட இடத்திலிருந்து துவங்கியிருக்கிறார். இதற்கிடையே, பாவனி – அமீரின் காதல் கதைகளும் சோஷியல் மீடியாவில் அதிக கவனம் ஈர்த்து வந்தது.
பிக்பாஸ் வீட்டில் தனது காதலை தெரிவித்த அமீருக்கு, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2-வில் ஓகே சொன்னார் பாவனி. இதனையடுத்து, இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனியிடம், ‘கடந்த கால வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை திரும்ப பெற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த பாவனி, ”எனது கணவர் திரும்ப வர வேண்டும். அவர் இப்போது உயிருடன் இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும், தனது இந்த பதிலால் அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் அமீருடன் தற்போது மகிழ்ச்சியான சூழலில் இருக்கிறேன். அமீர் என் வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயம் என்று கூறியுள்ளார். பாவனியின் இந்த பதில் பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. அதேசமயம் பாவனி தனது கணவர் மீது வைத்திருக்கும் காதலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.