பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிரிப்பது போன்ற சத்தம் கேட்டதாக நடிகை ரச்சிதா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமையம் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர். ஆனால், அதில் ரச்சிதா மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்.
பின்னர், வெளியே வந்த ரச்சிதாவிடம் வெளியே படுத்திருந்த 4 பேரும், ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட்டீர்கள்? என்று கேட்டனர். அதற்கு ரச்சிதா, ’என்னால் தூங்க முடியவில்லை, தூங்கும் பொழுது திடீரென சத்தங்கள் வருகிறது. ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன், அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அதே போல் மற்றவர்களின் சத்தமும் கேட்டது. மீண்டும் எழுந்து பார்த்தபோது அனைவரும் தூங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை’. என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் உலா வரும் நிலையில், ரச்சிதா இப்படி கூறியுள்ளது அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரச்சிதா இப்படி கூறியவுடன் நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகியோர் சற்று பதறிப்போனார்கள்.