நயன்தாரா விதிகளை மீறவில்லை என அரசே தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் உண்மையான திருமண தேதியை அறிவித்துள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால் அரசே விசாரணையை தொடங்கியது. இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை வெளியிட்டது அரசு. இருவரும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. மார்ச் மாதத்தில் கருப்பையில் சினை முட்டை வைக்கப்பட்டதாகவும் . 6 மாதத்தில் பிரசவம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா 2016ம் ஆண்டு மார்ச் 11ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அதுதான் உண்மையான திருமண தேதி எனவும் ஊரறிய திருமணம் செய்து கொண்டது ஜூன் 9 எனவும் தெரிவித்துள்ளத. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவாகரம் சர்ச்சை ஆன நிலையில் உண்மைத்தன்மை பற்றி பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகள் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.