சமீபகாலமாக திரை பிரபலங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திருமணம் செய்து கொள்கின்றனர். ஏற்கனவே டோலிவுட் திரையுலகில் உள்ள பல நடிகர்களும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி வரும் நிலையில், தற்போது நடிகைகள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் நடிகை நித்யா மேனனும் (Nithya Menen) இணைந்துள்ளார். ‘ஓகே கண்மணி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் அவர் தனது பால்ய நண்பரான மலையாள ஹீரோவுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.