fbpx

ஓஹோ.. இதனாலதான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்களா த்ரிஷா..!! பிரபல நடிகர் சொன்ன காரணம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என கோலிவுட்டின் டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் படத்தில்’ குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் சினிமா மார்கெட் மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், தளபதி 67 படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

ஓஹோ.. இதனாலதான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்களா த்ரிஷா..!! பிரபல நடிகர் சொன்ன காரணம்..!!

இந்நிலையில், 40 வயதை நெருங்கும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “பொன்னியின் செல்வன் பட வெளியான பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதனால் தற்போது தமிழ் சினிமாவில் ரூ.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அவர் வலம் வருகிறார். துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமான த்ரிஷா, பின்னர் கதாநாயகியாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. 

ஓஹோ.. இதனாலதான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்களா த்ரிஷா..!! பிரபல நடிகர் சொன்ன காரணம்..!!

பின்னர் த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்ததோடு, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். ஆனால், அந்த காதலும் தோல்வியில் முடிந்து, இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் த்ரிஷா நடிகர் சிம்புவின் காதல் வலையில் சிக்கி வெளியே வந்தார். தற்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில், அவர் யாரையும் பிடிக்கவில்லை என திருமணம் செய்யாமல் உள்ளார். த்ரிஷாவுக்கும் நடிகை நயன்தாரா போல் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசையாக உள்ளது. ஆனால், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் போதெல்லாம், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர்கள்தான் தனது நினைவுக்கு வருகிறார்கள் என்று கூறும் த்ரிஷா, எங்கே தனக்கும் அவர்களை போல் விவாகரத்தாகிவிடும் என்று பயமாக உள்ளது என்றும் அந்த பயத்தால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஓஹோ.. இதனாலதான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்களா த்ரிஷா..!! பிரபல நடிகர் சொன்ன காரணம்..!!

மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், தான் யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கலாம் என்பதாலும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். தான் திருமணம் செய்து கொள்ளும் நபர் நடிக்க வேண்டாம் என்று கூறினாலோ அல்லது நடிக்க அனுமதி கொடுத்து சந்தேகப்பட்டாலோ வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதால் த்ரிஷா திருமணத்தை தொடர்ந்து தள்ளி போடுகிறார்” எனக் கூறியுள்ளார்.

Chella

Next Post

ஹெல்மெட் இல்லையா..? அப்படினா இனி பெட்ரோலும் கிடையாது..!! ஆட்சியர் அதிரடி

Thu Nov 24 , 2022
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இருசக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 126 பேர் உயிரிழந்தனர். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல், பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் […]

You May Like