fbpx

’காது கேட்காத மகனுக்கு ஆப்ரேஷன்’..!! ’நீயா நானா’வில் இலவச மருத்துவ காப்பீட்டை பாராட்டிய வடமாநில பெண்..!!

தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்றாக வடமாநில பெண் ஒருவர் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளே பெரும்பான்மையாக மாறி மாறி ஆட்சி செய்தன. இந்த 3 கட்சிகளின் ஆட்சியிலுமே கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்விக்கான திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

’காது கேட்காத மகனுக்கு ஆப்ரேஷன்’..!! ’நீயா நானா’வில் இலவச மருத்துவ காப்பீட்டை பாராட்டிய வடமாநில பெண்..!!

கல்வி ஒருபுறம் என்றால், மருத்துவம் மறுபுறம். அம்மா மருந்தகம், அம்மா மினி க்ளீனிக், மக்களைத் தேடி மருத்துவம் என மருத்துவத்திற்கான திட்டங்களின் பட்டியலும் நீள்வதைக் காண முடிகிறது. தமிழ்நாடு மருத்துவத்தில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்று கூறும் வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமாநில பெண் ஒருவர் பேசியுள்ளார்.

’காது கேட்காத மகனுக்கு ஆப்ரேஷன்’..!! ’நீயா நானா’வில் இலவச மருத்துவ காப்பீட்டை பாராட்டிய வடமாநில பெண்..!!

‘என் பையனுக்கு பிறந்ததிலிருந்து ஒரு வருஷமா காதும் கேட்கல. வாய் பேசவும் முடியல. எனக்கும் அது தெரியல. காரணம் அவன் என்னோட முதல் குழந்தை. உன் பையன் அம்மா, அப்பா-னு கூப்பிடுறானானு பக்கத்து வீட்டிலிருந்த தமிழ்க்கார அக்கா தான் கேட்டாங்க. நான் இல்லனு சொன்னேன். உன் பையன் விளையாடும்போது பின்னால ஒரு பாத்திரத்தை கீழே போடு. அவன் திரும்பி பார்க்குறானா பாருனு அவங்க சொன்னாங்க. நானும் அத செஞ்சு பார்த்தேன். அவன் திரும்பி பார்க்கல. பிறகு டாக்டரை பாத்தோம். ரிபோர்ட்ல என் பையனுக்கு காதும் கேட்காது, வாய் பேசவும் முடியாதுனு வந்துச்சு. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. டாக்டர் கிட்ட என்ன செய்யலாம்னு கேட்டேன். உங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கானு கேட்டாங்க. என் கிட்ட அப்போ இல்ல. ரேஷன் கார்டு இருந்தா CM Scheme-ல ஆப்ரேஷன் பண்ணலாம்னு டாக்டர் சொன்னாங்க.

’காது கேட்காத மகனுக்கு ஆப்ரேஷன்’..!! ’நீயா நானா’வில் இலவச மருத்துவ காப்பீட்டை பாராட்டிய வடமாநில பெண்..!!

ரேஷன் கார்டு வாங்குறதுக்கு 4 வருஷம் ஆயிடுச்சு. கடைசில எல்லா டாக்குமெண்ட்டையும் டாக்டர் கிட்ட கொடுத்தோம். சென்னையிலே என்னோட பையனுக்கு ஃப்ரீயா ஆப்ரேஷன் பண்ணோம். தமிழ்நாடு அரசுக்கு நான் ரொம்ப நன்றி சொல்றேன். என்னோட ஊர்ல இருந்திருந்தா என் பையனுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்க முடியாது. தமிழ்நாட்டுல எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு. 6 லட்ச ரூபாய் செலவாகும் ஆப்ரேஷன், ஃப்ரீயா என் பையனுக்கு கிடைச்சுருக்கு. இன்னைக்கு என் பையன் அம்மா, அப்பா-னு கூப்பிடுறான்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மடிக்கணினியை பேருந்தில் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலித்த மாநிலம்…

Sun Nov 13 , 2022
கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணித்த நபரிடம் மடிக்கணினியை எடுத்துச் சென்றதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மக்கள் வசதிக்காக அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற. கர்நாடக மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தமிழகம், கேரளா, ஆந்திராவிற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் லேப்டாப் எடுத்துச் செல்கின்றனர். இது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெங்களூருவில் ஐ.டி.துறையினர் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இதனால் வெகு தூரத்தில் பயணிப்பவர்கள் லேப்டாப்பை வைத்திருக்கின்றனர். […]

You May Like