fbpx

பொன்னியின் செல்வன் 3ஆம் பாகம் வருமா..? ஜெயம் ரவி சொன்ன அந்த வார்த்தை..!! ரசிகர்கள் ஷாக்..!!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த நிலையில், தற்போது படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். மொத்த படக்குழுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்று படம் ரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டோரும் அமர்ந்து படம் பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வருமா என செய்தியாளர்கள் நடிகர் ஜெயம் ரவியிடம் கேட்டனர். அதற்கு அவர் சிரித்துவிட்டு ‘BYE’ என கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு முன்பே மணிரத்னம் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் படம் வருமா? என்ற கேள்விக்கு, ‘நிச்சயம் வரும், ஆனால் அதை யார் எடுப்பார்கள் என தெரியாது’ என கூறி இருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் 3ஆம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Chella

Next Post

பாஜகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ்..? அண்ணாமலையின் பதிலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Fri Apr 28 , 2023
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த பதில்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனாலும், இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக நானே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

You May Like