பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த நிலையில், தற்போது படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். மொத்த படக்குழுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்று படம் ரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டோரும் அமர்ந்து படம் பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வருமா என செய்தியாளர்கள் நடிகர் ஜெயம் ரவியிடம் கேட்டனர். அதற்கு அவர் சிரித்துவிட்டு ‘BYE’ என கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு முன்பே மணிரத்னம் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் படம் வருமா? என்ற கேள்விக்கு, ‘நிச்சயம் வரும், ஆனால் அதை யார் எடுப்பார்கள் என தெரியாது’ என கூறி இருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் 3ஆம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.