fbpx

தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி செப்.30ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனையிலும் பெரிய வசூலை குவித்து உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் சில தமிழ்ப் படங்கள் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘காஃபி வித் காதல்’ அக்.7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இப்போது படத்தின் வெளியீடு நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை – 2, ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, யோகிபாபு, கருணாகரன் நடித்த ’காசேதான் கடவுளடா’, சுந்தர வடிவேல் இயக்கியுள்ள ’ரீ’ ஆகிய படங்கள் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ’பொன்னியின் செல்வன்’ படம் பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் இந்த வாரம் வெளியாக இருந்த படங்கள் தள்ளிப் போகிறது.

தீபாவளி வரை திரையரங்குகளில் ’பொன்னியின் செல்வன்’ தான்..!! புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!!

பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய திரைப்படங்கள் வெளியானால் போதுமான ஸ்க்ரீன் கிடைக்குமா? வரவேற்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். எனவே, இந்த ரிலீஸ் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும், அடுத்த வாரமும் புதுப்படங்கள் வெளியாவது சந்தேகம் தான். ஏனென்றால், அதற்கடுத்தது தீபாவளி வாரம். ஒரே வாரம் மட்டும் ஓடி, தீபாவளிக்குப் புதுப்படங்கள் வெளியானதும் தியேட்டரில் இருந்து படத்தை எடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் இருக்கிறது. அப்படி அடுத்த வாரமும் எந்தப் படமும் வெளியாகவில்லை என்றால் நேரடியாக தீபாவளி ரிலீஸாக வர இருக்கும் சிவகார்த்திகேயனின் ’ப்ரின்ஸ்’, கார்த்தியின் `சர்தார்’ ஆகிய படங்கள் தான் தமிழில் இருந்து பொன்னியின் செல்வனுக்குப் பிறகு புது ரிலீஸாக வரும்.

Chella

Next Post

கருத்தரிப்பு மையங்கள்..!! கட்டணம் நிர்ணயம்..!! அக்.22ஆம் தேதிக்குள்..!! அரசு அதிரடி உத்தரவு

Tue Oct 4 , 2022
கருத்தரிப்பு மையங்கள், மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் […]
கருத்தரிப்பு மையங்கள்..!! கட்டணம் நிர்ணயம்..!! அக்.22ஆம் தேதிக்குள்..!! அரசு அதிரடி உத்தரவு

You May Like