fbpx

காதலனை கரம் பிடித்தார் பிரபல சீரியல் நடிகை..!! அதிர்ச்சியில் பெற்றோர்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிபவர் சாய் கணேஷ். இவர், சின்னத்திரை வட்டாரத்தில் ‘பாபு’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும் ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை தீபாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், முதல் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் முறைப்படி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தார். பின்னர், தீபாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். பலத்த எதிர்ப்பும் தீபாவுக்கு மிரட்டலும் இருந்திருக்கிறது. எனவே, இந்த ஜோடி திருமணத்தை பதிவுத் திருமணமாக எளிமையான முறையில் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், இருவருக்குமான ரகசியத் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகவும், பாபுவின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நடிகை தீபாவின் இந்த திருமணம் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அவருக்கு இந்த வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

மாதம் 30000 ரூபாய் ஊதியத்தில் BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்கள்….!

Tue Sep 5 , 2023
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது trainee officer, project Engineer, trainee engineer பணிகளுக்கென்று, 95 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 28 முதல் 32 என இருக்க வேண்டும். அதோடு, வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு […]

You May Like