fbpx

’ரஜினி, கமலை மிஞ்சிய சூர்யா’..!! படப்பிடிப்பு முடியும் முன்னரே அதிக விலைக்குப்போன ’சூர்யா 42’..!!

படப்பிடிப்பு முடியும் முன்னரே ’சூர்யா 42’ படத்தின் ஹிந்தி உரிமம் விற்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் ”சூர்யா 42”. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சமயத்தில், பலரும் இதை Troll செய்தனர். அதுவும் இதன் பின்னணி இசை கே.ஜி.எஃப் படத்தின் மியூசிக் போல் உள்ளது என்றும் கூறினர். 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் பான் இந்திய படம் இது என்ற செய்தியும் வந்தது. வரலாற்று கதை என்பதால், இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளது. சிலர் இது கோச்சடையான் போல் உருவாகும் அனிமேஷன் படமாக இருக்கும் என்ற கருத்துக்களையும் வெளியிட்டனர். ஆனால், அந்த குழப்பத்தை தவிர்க்கும்படி, இது ஒரு முப்பரிமாண படம் என்ற அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

’ரஜினி, கமலை மிஞ்சிய சூர்யா’..!! படப்பிடிப்பு முடியும் முன்னரே அதிக விலைக்குப்போன ’சூர்யா 42’..!!

தற்போது, இப்படத்தின் ஹிந்தி உரிமம் விற்கப்பட்டுள்ளது. அதுவும் ரஜினி, கமல் ஆகிய ஹீரோக்களின் உரிமத்தை விட அதிக பண அளவில் விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் ட்விட்டர் பக்கத்தில் பரவி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஷூட்டிங் போட்டோவை நடிகை திஷா பத்தானி அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு பிறகு, படத்தின் குழுவினர் படப்பிடிப்பு காட்சிகள் எதையும் ஷேர் செய்ய வேண்டாம். படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் வகையில் அது அமையும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா இந்த பிராமாண்ட படைப்பை உருவாக்கவுள்ளார். சிங்கம் படத்திற்கு பிறகு, பல வருடங்களுக்குப் பின் சூர்யா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

Chella

Next Post

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் மர்ம பெண் ஊமை ராணி யார் ?

Mon Oct 3 , 2022
பொன்னியின் செல்வன் பாகம் 1ல் காட்டப்படும் ஊமை ராணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம். பொன்னியின் செல்வன் பாகம் 1ல் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் , ஆழ்வார்க்கு அடியான் ஆகிய மூன்று பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அருள்மொழிவர்மனை கொலை செய்ய வரும் கும்பல் தாக்கத் தொடங்கும். அப்போது அவர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்துவிடும். இறுதியாக இக்கட்டான ஒரு கட்டத்தில் யானை மீது ஒரு பெண் […]

You May Like