fbpx

’திறந்த வெளி கக்கூஸ் மாதிரி யார் யாரோ யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறாங்க’..!! கொந்தளித்த வடிவேலு..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. இவர், தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாகிய திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்தத் திரைப்படம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், வடிவேலு ரசிகர்கள் சற்று அப்செட் ஆகினார்கள். இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

’திறந்த வெளி கக்கூஸ் மாதிரி யார் யாரோ யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறாங்க’..!! கொந்தளித்த வடிவேலு..!!

அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு யூடியூப்பில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். திறந்த வெளி கக்கூஸ் மாதிரி யார் யாரோ யூடியூப் சேனல் ஆரம்பித்து அசிங்க அசிங்கமா பேசுவதாகவும், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவிட்டு தோல்வியடைய செய்துவிட்டதாக வடிவேலு சொல்லி உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அடேங்கப்பா...!! ஒரு நாளைக்கு 9 ஆர்டர்..!! ’உணவுப் பிரியர் 2022‌’ என்ற பட்டத்தை கொடுத்த Zomato..!!

Fri Dec 30 , 2022
இந்தியாவில் 2022-ல் அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபருக்கு Zomato நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ’உணவுப் பிரியர் 2022‌’ என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உணவு சமைப்பதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். உணவு ஆர்டர் செய்வதில் Zomato செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், Zomato செயலியில் டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற நபர் தினந்தோறும் […]

You May Like