fbpx

திருமணத்தை மறைத்து கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை..!! குழந்தைக்கு யார் காரணம்?

’செவ்வந்தி’ சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், திருமணத்தை மறைத்து கர்ப்பமானதை அறிவித்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’செவ்வந்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. நாயகன் தனது முன்னாள் காதலிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை மனைவிக்கு தெரியாமல் வளர்க்கும் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையே, தங்கையின் திருமணம், தம்பி மனைவியின் சூழ்ச்சி என விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதில், நாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். முன்னதாக 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகியிருந்தவர் திவ்யா ஸ்ரீதர்.

திருமணத்தை மறைத்து கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை..!! குழந்தைக்கு யார் காரணம்?

அந்த சீரியலில் நடித்த போது திவ்யா – அர்னவ் அஜ்மத் இடையே காதல் மலர்ந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது. அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த அந்த ஜோடிகள், தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் எனக்கூறி திருமணம் குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

திருமணத்தை மறைத்து கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை..!! குழந்தைக்கு யார் காரணம்?

இந்நிலையில், சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட திவ்யா ஸ்ரீதர், “சமூகத்தில் எங்கள் அழகான பயணம் 2017இல் தொடங்கியது. கேளடி கண்மணியில் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்தோம். அது உண்மையான புரிதல் வரை நீடித்தது. இறுதியாக நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். அதனால் விஷயங்களை இன்னும் அழகாக மாற்ற முடியும் 5 வருட ஒற்றுமை, அன்பு, கவனிப்பு, சண்டைகள், வாக்குவாதங்கள் ஆனால் இன்னும் இரு வேறு மரபுகளில் நாங்கள் இணைந்திருந்தால் பல நல்ல உள்ளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதால் நாங்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி ஜோடிகள் என நினைக்கிறேன்.

திருமணத்தை மறைத்து கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை..!! குழந்தைக்கு யார் காரணம்?

எங்கள் சொந்த கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எங்கள் வாழ்வில் மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளோம். இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மிக அற்புதமான மற்றும் பொறுப்பான அத்தியாயத்திற்கு நுழைந்துள்ளோம். விரைவில் நாங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இருப்பினும், அவரது ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.328 குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் செம சான்ஸ்..

Tue Sep 27 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.36,880-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like