தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும், மக்கள் மனதில் எப்போது நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்டோர் தான். ஆனால், அவர்களுக்கு துணையாக அல்லது பின்புறத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களை நாம் மறந்து விடுகிறோம். அப்படி திறமை இருந்தும் வளர முடியாமல் இன்று வரை இருந்து வருபவர் தான் முத்துக்காளை.
இவர், வடிவேலுவின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடத்துள்ளார், வடிவேலும், முத்துகாளையும் வரும் காமெடிகள் என்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. முத்துக்காளை என் புருஷன் குழந்தை மாதிரி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து வின்னர், சீனா தானா, தவசி என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு வடிவேலுடன் கைகோர்த்து காமெடிகளில் மிரட்டி இருக்கிறார் முத்துக்களை.
தற்போது கூட பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். காமெடியனாக நடித்து வரும் முத்துக்காளை, உண்மையில் சண்டை மாஸ்டர். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கினார். அது மக்கள் மத்தியில் பிரபலமானதால் இன்று வரை காமெடியனாகவே நடித்து வருகிறார்.
இந்நிலையில், முத்துக்காளை பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ”நான் வடிவேலு உடனான துணை கதாபாத்திரங்களில் நடித்து தான் பெரிய தவறு செய்து விட்டேன் எனவும் தனக்கென தனி வழியில் சென்றிருந்தால் இன்று அவரைப் போல நானும் உயர்ந்திருக்கலாம்” எனவும் கூறி இருக்கிறார்.