fbpx

மர்ம தேசம் , ஜீ பூம்பா சீரியல்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்கொலை ! .. என்ன காரணம் ?  

மர்ம தேசம் , ஜீ பூம்பா போன்ற மர்ம தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலையால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் 2ம் தேதி மயங்கியநிலையில் லோகேஷ் கிடந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை் பரிசோதித்தபோது தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமான லோகேஷ் ஜீபூம்பா , மர்ம தேசம் , உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான தொடர்களான இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அனைவர் மனதிலும் நீங்காது இடம்பிடித்தார். பின்னர் நடிப்பதில் ஆர்வமில்லாததால் எதிலும் நடிக்காமல்  விலகி இருந்தார்.

லோகேஷ் தன் தாயுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சனையில் சிக்கியிருந்ததாகவும் பல நாட்கள் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினி இன்டஸ்ட்ரியில் இருந்து விலகி இருந்த நிலையில் சமீபத்தில் வெப்சீரிஸ் இயக்கி வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சனையில் இருந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகின்றது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கோயம்பேடு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். எனினும் இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை …

Wed Oct 5 , 2022
முன்னாள் தமிழக பாஜ  தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான  இல.கணேசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் பா.ஜ. தலைவரான இலகணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கம் மற்றும்மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநர் இலகணேசன் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து […]

You May Like