விஜய் டிவியில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லமா, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை உடைத்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமான பயணத்தின் போது அவர் நன்கு தூங்கி கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் பின் சீட்டிலிருந்து தன் மீது கை வைத்தாராம்.
இதனை அறிந்த திவ்யா அவரை பயங்கரமாக அடித்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு தவறாக நடப்பவர்களை சும்மா விட கூடாது என கூறி இருக்கிறார். மேலும், மீடியாவில் வெளிப்படையாக எதுவும் பேச முடியவில்லை. காரணம் நான் ஒன்று சொன்னால் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் பேட்டியில் கூட என்னால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.