fbpx

’சினிமாவுக்கு நடிக்க வந்ததே இதுக்குதான்’..!! தரமான 5 கோடீஸ்வர நடிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க வந்ததற்கு பின்புதான் அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்து பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், ஒரு சில நடிகர்கள் பிஸ்னஸ் செய்துவிட்டு அதை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிக்க வந்துள்ளனர். அப்படிப்பட்ட 5 பிஸ்னஸ்மேன் நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

’சினிமாவுக்கு நடிக்க வந்ததே இதுக்குதான்’..!! தரமான 5 கோடீஸ்வர நடிகர்கள்..!!

சரவணன் அண்ணாச்சி: பெஸ்ட், பெஸ்ட் என்று தனது சொந்த ஜவுளி கடையான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தானே நடித்து விளம்பர சாம்ராஜ்யத்திற்கு புதுவிதமான விளம்பரங்களை அள்ளித் தந்தவர்தான் நடிகர் சரவணன். விளம்பரத்தில் தான் நடிக்கிறார் என்று பார்த்தால், திடீரென ’தி லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தை தானே தயாரித்து படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றியையும் கொடுத்துள்ளார். தற்போது தி லெஜெண்ட் சரவணன் தயாரிப்பு மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

ஆர்.கே. சுரேஷ்: தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியவர் தான் தயாரிப்பாளர், நடிகர் ஆர். கே. சுரேஷ். ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வந்தார். அதன் பின்னர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக களம் இறங்கிய ஆர்.கே.சுரேஷ் இத்திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஆர்.கே: ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ஆர்.கே,. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருபவர். தமிழில் வெளியான ’எல்லாம் அவன் செயல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலாவின் ’அவன் இவன்’ திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜயின் ஜில்லா, விஷாலின் பாயும்புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரியல் எஸ்டேட் பிசினஸில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள ஆர்.கே. தற்போது சினிமாவில் நடிப்பதை சிலவருடங்கள் நிறுத்தியுள்ளார்.

பவர் ஸ்டார்: ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இத்திரைப்படம் ரிலீஸான சில நாட்களிலேயே இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பைனான்ஸ் கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். மேலும், மருத்துவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வசந்த்: Vasanth & Co நிறுவனரான மறைந்த வசந்த் அவர்களின் மகனான விஜய் வசந்த் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்பு சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்த விஜய் வசந்த், தந்தையின் மறைவிற்குப் பின் Vasanth & Co நிறுவனத்தை அவர் ஏற்று நடத்தி வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆகவும் உள்ளார்.

Chella

Next Post

இந்தியாவிலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி - பிரதமர் மோடி

Mon Dec 19 , 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை அடுத்து அந்த அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்திய இளைஞர்கள் மீதும் தனக்கு நம்பிக்கை உள்ளது -பிரதமர் மேகாலயா : மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நேற்று ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like