fbpx

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, லியோ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வனில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேச வந்த நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா, கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது எனவும் கோவையில் தனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கும், கோவை மக்கள் பேசுகின்ற தமிழ் பிடிக்கும், அழகாக இருக்கும் எனவும் உணவு பிடிக்கும் என்றும், கோவையில் அமைதி எப்போதும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என தெரியவில்லை. எப்போதும் கோவையில் பாசிட்டிவிட்டி இருக்கும் என தெரிவித்தார்.

த்ரிஷா பேசும் போது குறிக்கிட்ட ரசிகர்கள் லியோ திரைப்பட்டதின் அப்டேட் கேட்டு ஆரவாரம் செய்ததை அடுத்து அப்டேட் சொன்ன நடிகை த்ரிஷா, “லியோவோட சூட்டிங்ல இருந்துதான் வரேன், லோகேஷும் உங்களோட தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க, மற்றதை லியோ ஈவன்ட்ல பேசலாம் என அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Chella

Next Post

விஜய் சேதுபதி விலகிய படத்தில் எந்த ஹீரோ நடிக்கிறார் தெரியுமா..? பர்ஸ்ட் லுக் உடன் வந்த அப்டேட்..!!

Mon Apr 17 , 2023
தமிழ் திரையுலகில் வில்லன், ஹீரோ என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், கடந்த 2020ஆம் ஆண்டு 800 என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், பிரபல சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்க இருந்தனர். இப்படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயோப்பிக்கில் விஜய் சேதுபதி […]

You May Like