fbpx

உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் பிரபல கவர்ச்சி நடிகை மீது பாய்ந்த தொழிலதிபர்..!! பரபரப்பு புகார்..!!

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. குறிப்பாக, எந்த ஒரு நடிகையும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை புத்தகங்களில் வெளியிட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆடையின்றி புகைப்படங்களை வெளியிட அனுமதி கொடுத்த ஒரே நடிகை என்ற புகழையும் கொண்டவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் ரசிகர்களை கரங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள தகவல் பாலிவுட் திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. இந்தியில் மற்றொரு கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்துக்கும் ஷெர்லின் சோப்ராவுக்கும் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இருவரும் தற்போது சமரசம் ஆகினர். ஷெர்லின் சோப்ராவிடம் ராக்கி சாவந்த் மன்னிப்பு கேட்டு சமரசமாகினர்.

இந்நிலையில், தற்போது தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தாக நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து ஷெர்லின் கூறுகையில், ”மும்பை தொழிலதிபர் ஒருவர் துபாயிலிருந்து எனக்காக வந்திருப்பதாக கூறினார். மேலும், என்னை ஹோட்டலில் சந்திக்க விரும்புவதாக கூறினார். எனது மேலாளருடன் அவர் கூறிய ஹோட்டலுக்கு மாலை பொழுதில் வந்தேன். அங்கு இருந்த நபர் தான் சுனில் பரஸ்மானி லோதா என அறிமுகம் செய்து கொண்டார். அவர் என்னிடம் ஒரு வீடியோ ஆல்பம் பாடல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு நானும் சம்மதித்தேன். எனது மேனேஜரிடம் பாடல் தயாரிப்புக்காக அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.

தொடர்ந்து தொழிலதிபர், நான் கவர்ச்சியாக இருப்பதாகவும் என்னை வெகுவாக பாராட்டியும் பேசினார். பின்னர் சிறிது நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் வீட்டிற்கு கிளம்ப முயன்றபோது, அவர் தன்னிடம் வாகனம் இல்லாததால் தான் சொல்லும் இடத்தில் இறக்கிவிட முடியுமா> என கேட்டார். நானும் ஓகே சொல்லி விட்டு, என்னை முதலில் என் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவரை அவரது வீட்டில் இறக்கி விடுமாறு என் டிரைவரிடம் சொன்னேன். என் வீடு வந்தவுடன் அந்த நபர் உங்கள் வீட்டை பார்க்க முடியுமா? என கேட்டார். நானும் வாங்க என அழைத்துச் சென்றேன். சோபாவில் அமர்ந்து மது அருந்திய போது எனது மார்பில் கை வைத்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே நான் கவர்ச்சியாக இருப்பதாக என்னை வர்ணித்தார். எனக்கு இதெல்லாம் பிடிக்காது நீங்கள் உடனே கிளம்புங்கள் என்றேன்.

உடனே அவர் மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என கூறி என் அறைக்கு வந்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது நான் கவர்ச்சியாக இருப்பதால் தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினார். உடனே நான் எதிர்த்ததால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்” என ஷெர்லின் கூறியிருக்கிறார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் சுனில் லோதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

SBI வங்கியில் வேலை…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Mon Apr 17 , 2023
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Vice President பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் […]

You May Like