fbpx

வெளியான முதல் வாரமே ரூ.50 கோடியை அள்ளிய ’வாத்தி’..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. சிவகார்த்திகேயன், விஜய்-ஐ தொடர்ந்து தனுஷும் தெலுங்கு இயக்குநருடன் இணைந்துள்ளார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த பிப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை, சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

வாத்தி திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம், முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாயும், தெலுங்கில் 16 கோடியும், வெளிநாடுகளில் 5 கோடி ரூபாயும், வாத்தி திரைப்படம் வசூலித்துள்ளது.

Chella

Next Post

நூலிழையில் தப்பிய இந்திய மகளிர் அணி..!! அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!!

Tue Feb 21 , 2023
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பைதொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியினர் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் அதிரடியாக […]
நூலிழையில் தப்பிய இந்திய மகளிர் அணி..!! அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!!

You May Like